நாட்டில்,நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் 40 முதல் 50 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட்-19 நோயாளர்களை அடையாளம் காண நாளாந்தம் சுமார் 1,000 பரிசோதனைகள் நடத்தப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
அண்மைய நாட்களில் கண்டறியப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள அதேவேளை, சில நாட்களுக்கு ஒருமுறை நாட்டில் கொவிட் -19 தொடர்பான மரணங்களை அதிகாரிகள் உறுதிப்படுத்துவதாக சங்கத்தின் செயலாளரான வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
