முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம்?

முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்துவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது வழங்கப்படும் 5 லீற்றர் பெற்றோல் கோட்டாவை அதிகரித்தால் கட்டணத்தை குறைக்க முடியும் என அச்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார்.

ஐந்து லீற்றர் பெற்றோல் கோட்டா போதுமானதாக இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் ஏனையவர்களிடம் பெற்றோல் கேட்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles