முன்னிலை சோசலிஷக் கட்சி தலைமையகத்தில் தேடுதல் வேட்டை

நுகேகொட பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிஷக் கட்சியின் தலைமையகம் இன்று காலை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு, சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு  இன்றி, பலவந்தமாகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது, இது அரச பயங்கரவாத செயல் என முன்னிலை சோசலிஷக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

ராஜபக்சக்களை விரட்டுவதற்கான போராட்டத்தில் முன்னிலை சோசலிஷக் கட்சியும் முன்னிலை வகித்தது.

இந்நிலையில், போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும், அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவுமே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles