மேலும் ஒரு வாரத்திற்கு முடக்கம் நீடிக்கிறது!

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மேலும் சில வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

எவ்வாறாயினும், கொவிட் தொற்றாளர், மரணம் ஆகியவை குறைந்துவருவதாகவும், தொடர்ந்தும் நாட்டை முடக்கிவைக்க முடியாது என்றும் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அத்தியாவசிய சேவைகளுக்கும் அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 10 நாட்களில் பதிவாகிய கொவிட் மரணங்கள்!
செப். 08 – 175
செப். 07 – 185
செப். 06 – 184
செப். 05 – 180
செப். 04 – 189
செப். 03 – 145
செப். 02- 202
செப். 01 – 204
ஓகஸ்ட் 31 – 215
ஓகஸ்ட் – 194

Related Articles

Latest Articles