மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் அனைவருக்கும் பரிசோதனை

இன்று முதல் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் அனைவரும், ரெபிட் ஆன்டிஜென் என்ற துரித கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த பரிசோதனைகள் அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட 11 இடங்களில் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்

ஏற்கனவே இவ்வாறு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இதனை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் மேல் மாகாணத்தில் இருந்து அதிகமானோர் ஊர்களுக்குச் செல்லக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles