கொரோனா வைரஸ் தாக்கத்தால் 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மேல் மாகாணத்தில் 47 ஆயிரத்து 760 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 940 தொற்றாளர்களில் 618 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று வரை கொழும்பு மாவட்டத்தில் 27,243 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 14,865 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில்5,652 பேருக்கும், இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அத்துடன் மேல் மாகாணத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.