மேல் மாகாணத்தில் 28,418 பேருக்கும் மத்திய மாகாணத்தில் 1,882 பேருக்கும் கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மேல் மாகாணத்தில் 28 ஆயிரத்து 418 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 588 தொற்றாளர்களில் 451 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று வரை கொழும்பு மாவட்டத்தில் 16 ஆயிரத்து 748 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 84 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 8 ஆயிரத்து 550  பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்திலேயே அதிகளவு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, மத்திய மாகாணத்தில் ஒக்டோபர் 4 ஆம் திகதி நேற்றுவரை ஆயிரத்து 882 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles