மோட்டர் வாகனத் திணைக்களத்தின் நாரா`னன்பிட்டி, வெஹஹெர அலுவலகங்கள் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
திவுலப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 701 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.