யூரோ கிண்ணம் – 25 ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அரைஇறுதிக்கு தகுதி

ஐரோப்பிய கால்பந்து போட்டியில்,  உக்ரைனை 4-0 என்ற கோல் கணக்கில் சீர்குலைத்த இங்கிலாந்து அணி 25 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டியில் நேற்று முன்தினம் இரவு இத்தாலி தலைநகர் ரோம் நகரில் அரங்கேறிய கடைசி கால்இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, உக்ரைனை சந்தித்தது.

இதில் எதிர்பார்த்தது போலவே பலம் வாய்ந்த இங்கிலாந்தின் ஆதிக்கமே மேேலாங்கியது. 4-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் கோல் கணக்கை கேப்டன் ஹாரி கேன் தொடங்கி வைத்தார்.

சக வீரர் ஸ்ெடர்லிங் தட்டிக்கொடுத்த பந்தை அவர் ேநா்த்தியாக வலைக்குள் தள்ளினார். அதன் பிறகு மேலும் சில ஷாட்டுகளை உக்ரைன் கோல் கீப்பர் ஜியார்கி புஷ்சன் தடுத்து விட்டார்.பிற்பாதியில் இங்கிலாந்து வீரர்கள் மேலும் ஆக்ரோஷமாக துடிப்புடன் செயல்பட்டனர்.

46-வது நிமிடத்தில் ‘பிரிகிக்’ வாய்ப்பில் லுக் ஷா கோல் பகுதியை நோக்கி தூக்கியடித்த பந்தை அங்கு நின்ற இங்கிலாந்தின் ஹாரி மேக்குவையர் துள்ளிகுதித்து தலையால் முட்டி கோலாக்கினார்.

தொடர்ந்து 50-வது நிமிடத்தில் ஹாரி கேனும், 63-வது நிமிடத்தில் ஜோர்டான் ஹென்டர்சனும் தலையால் முட்டி கோல் அடித்து அசத்தினர். இங்கிலாந்து அணிக்காக 62-வது ஆட்டத்தில் ஆடிய ெஹன்டர்சனுக்கு இது தான் முதலாவது சர்வதேச கோலாகும். இங்கிலாந்தின் கோல் மழையால் உருக்குலைந்த உக்ரைனால் இறுதி வரை நிமிரவே முடியவில்லை.

முடிவில் இங்கிலாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை பந்தாடி அரைஇறுதிக்கு முன்னேறியது. யூரோ கால்பந்து வரலாற்றில் இங்கிலாந்தின் மிகச்சிறந்த வெற்றி இதுவாகும். அத்துடன் இதுவரை ஆடியுள்ள 5 ஆட்டங்களிலும் எதிரணிக்கு ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காமல் பிரமாதப்படுத்தியுள்ளது.

பெரிய தொடர்களில் (உலக கோப்பை மற்றும் யூேரா) இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் கோல் விட்டுக்கொடுக்காதது இதுவே முதல் முறையாகும்.

1996-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அரைஇறுதிக்கு வந்துள்ள இங்கிலாந்து அணி அடுத்து டென்மார்க் அணியை லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் 7 ஆம் திகதி சந்திக்கிறது. அதற்கு முன்பாக 6 ஆம் திகதி நடக்கும் மற்றொரு அரைஇறுதியில் இத்தாலி-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

ஹாரி கேன் பேட்டி

Related Articles

Latest Articles