தற்காலிக தொழிலாளர்களுக்கும் ரூ. 1750 வழங்க நடவடிக்கை எடுக்கவும்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்னவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1,750 சம்பளத்தைப் பெற்றுக் கொடுத்தமைக்காக அமைச்சர் சமந்த வித்தியாரத்னவுக்கு, அரசாங்கத்திற்கும் செந்தில் தொண்டமான் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மேலும், ரூ.1,750 சம்பளம் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுவதாகவும், தற்காலிகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டிய செந்தில் தொண்டமான், தற்காலிகத் தொழிலாளர்களுக்கும் ரூ.1,750 சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அதேவேளை, தோட்ட தொழிலாளர்களின் 1750 ரூபாய் சம்பளத்தில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் 200 ரூபாய் கொடுப்பனவை தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

வங்கி கணக்கு இல்லாத தோட்டத் தொழிலாளர்களுக்கு, வங்கி கணக்குகளை ஆரம்பிக்க தொழிற்சங்க ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் சமந்த வித்தியாரத்னவிடம் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles