ரணிலின் வெற்றிக்காக கம்பஹாவில் கூட்டு ஒப்பரேஷன்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து கம்பஹா தொகுதியில் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நேற்று (03) நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த கூட்டு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டது.

கம்பஹா தொகுதியில் கம்பஹா மாநகர சபை மற்றும் கம்பஹா பிரதேச சபை என இரண்டு உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. இந்நிகழ்வின் அழைப்பாளராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் லக்ஷ்மன் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய நாலக கொடஹேவா தற்போது ஐ.ம.சக்தியுடன் இருக்கின்றார்.

எனவேதான் கம்பஹா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க செயற்படுகின்றார்.

இது தவிர, ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா தொகுதி அமைப்பாளர் வருண தீப்த ராஜபக்ஷவுடன் உள்ளூராட்சிப் மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.தே.க பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாக்கெடுப்பு நிலைய முகவர்கள் நியமித்தல், சிறிய பொதுக் கூட்டங்கள் மற்றும் ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அனைத்துக் கட்சிகளையும் கொண்ட கூட்டு வழிநடத்தல் குழுவும் நியமிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles