ரணிலுக்கு ஆதரவு இல்லை – ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் கைவிரிப்பு

நாடாளுமன்றம்வரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்காது – என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளனர் என வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ரணிலுடன் இணையமாட்டார்கள், அவருக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள். எனினும், ஆளுங்கட்சி பக்கமுள்ள 60 பேர் இணையக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

ரணில் என்பவர் எமக்கு பிரச்சினை அல்ல. நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்கே தற்போது முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும்.

சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரவியதாலேயே சஜித்துக்கு ஆதரவு தெரிவித்து நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது சாதாரண விடயமாகும். மாறாக கட்சிக்குள் பிளவு இல்லை.” – என்றார்.

Related Articles

Latest Articles