ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை எடுக்காவிட்டால் கட்சி இரண்டாக பிளவுபடும் என்று அக்கட்சி உறுப்பினரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க பக்கமே நான் நிற்கின்றேன். மொட்டு கட்சி தனி வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால்கூட ரணிலுக்கே நான் ஆதரவு வழங்குவேன். ஆனால் அவ்வாறானதொரு முடிவை கட்சி எடுத்தால் கட்சி பிளவுபடும். பெரும்பாலான உறுப்பினர்கள் ரணில் பக்கம் நிற்பார்கள்.
நாமல் ராஜபக்ச சிறந்த அரசியல்வாதி. சஜித், அநுரவைவிட சிறந்தவர். எனினும், மொட்டு கட்சியை மக்கள் நிராகரித்துள்ளதால் தற்போதைய சூழ்நிலையில் அவர் களமிறங்ககூடாது. நாமல் களமிறங்கினாலும் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். தேர்தலில் களமிறங்கும் நிலைப்பாட்டில் நாமலும் இல்லை.
ஜனாதிபதியின் பதவிகாலம் ஐந்தாண்டுகள்தான், ஆளுங்கட்சி நீதிமன்றத்தை நாடவில்லை. சிலவேளை அது எதிரணிகளின் சதியாகக்கூட இருக்கலாம்.” – என்றார்.
