தெற்கு ரஷ்ய பிராந்தியமான Dagestanஇல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ மற்றும் வெடிப்பில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 25 பேர் பலியாகியுள்ளனர். 66 பேர்வரை காயமடைந்துள்ளனர்.
கார்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் தீப்பிடித்து அத் தீ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பரவியது என கூறப்படுகின்றது.
காயமடைந்தவர்களின் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக ரஷ்ய துணை சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் 10 சிறார்களும் உள்ளடங்குகின்றனர்.
சுமார் மூன்றரை மணிநேரத்துக்கு பின்பு கடும் போராட்டத்துக்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.