ராகலை தீ விபத்து – சந்தேகநபருக்கு மறியல் நீடிப்பு

நுவரெலியா – ராகலை தோட்டம் முதலாம் பிரிவிலுள்ள வீடொன்றில் பதிவான தீச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை வலப்பனை நீதவான் நீதிமன்ற நீதிபதி டி.ஆர். ஜினதாச முன்னிலையில் இன்று (22) நண்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபரான தங்கையா ரவிச்சந்திரன் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

சந்தேகநபர் பதுளை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதவானிடம் தெரிவித்ததுடன் கொரோனா அபாயம் காரணமாக சந்தேகநபரை மன்றுக்கு அழைத்துவரவில்லை எனவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் வலப்பனை நீதிமன்றத்தில் இருந்து பதுளை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குறித்த சந்தேகநபருடன் Skype ஊடாக நீதிபதி தொடர்புகொண்டு விசாரணைகளை முன்னெடுத்தார்.

இந்த வழக்கு விசாரணை தொடர்பில் ராகலை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

குறித்த தீ சம்பவம் குறித்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய ராகலை பொலிஸாரினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை அறிக்கைகளும் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

ராகலை தோட்டம் முதலாம் பிரிவிலுள்ள தற்காலிக வீடு ஒன்றில் கடந்த மாதம் 07 ஆம் திகதி இரவு தீ பரவியது.

இதன்போது வீட்டிற்குள்ளிருந்த ஐவர் தீக்கிரையான நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles