லொறி – ஆட்டோ விபத்து, வயோதிபப் பெண் பலி! இருவர் படுகாயம்!!

மொனராகலை வீதி மூன்றாம் கட்டை தொலம்பவத்த பகுதியில் இன்று முற்பகல் லொறியொன்றும் ஆட்டோவொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஆட்டோவில் பயணித்த வயோதிப பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.

ஆட்டோ சாரதி உட்பட மேலும் இருவர் காயங்களுடன் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லொறியின் சாரதி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பசறை பொலிஸார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles