வடக்கு மாகாண ஆளுநராக மலையகத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான இராஜ கோபால் நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நாளைமறுதினம் வியாழக்கிழமை இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது என்று அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.
மலையகத்தைச் சேர்ந்த இராஜ கோபால், பெரும் வர்த்தகர். இவர் இந்தியாவின் உயர்மட்ட அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.










