‘வாக்குகளை விற்று எதிர்காலத்தை வீணடிக்காதீர்’

” தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் துளியும் தெரியாதவர்கள்கூட, பல்வேறு உறுதிமொழிகளை வழங்கி தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு வாக்களிப்பது எமது எதிர்காலத்தை வீணடிக்கும் செயலாகும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் எஸ். சதாசிவம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” தோட்டத் தொழிலாளர்களின் வரலாறு மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அறியாதவர்களும், அனுபவமற்றவர்களும், தொழிலாளர்களுக்காக குரல்கொடுப்பதுபோல் நடித்து வாக்குகேட்கின்றனர்.

மக்களே சிந்தியுங்கள், வாக்கு என்பது விற்பதற்கு அல்ல. எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக அதனை பயன்படுத்தவேண்டும். தொழிலாளர்கள் பற்றி தெரியாதவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள் எமது எதிர்காலத்தை வீணடிக்கும்.” – என்றார்.

Related Articles

Latest Articles