விபத்தில் இளைஞன் பலி: வவுனியாவில் சோகம்

வவுனியா குருக்கள் புதுக்குளத்தில் இன்று வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருக்கள் புதுக்குளத்தில் இருந்து தம்பனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற 30 வயது நபரே மின்கம்பத்தில் மோதுண்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

மின்கம்பி அறுந்த நிலையில் அவ்விடம் காணப்படுவதனால், அந்த மின்கம்பி ஏற்கெனவே அறுந்து விழுந்திருந்ததா அல்லது விபத்து ஏற்பட்டபோது அறுந்து விழுந்ததா என்பதை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Latest Articles