விபத்தில் ஒருவர் பலி: நால்வர் காயம்!

 

ரிகில்கஸ்கட, கட்டுகஸ்ஹின்ன பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார். மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

பஸ்ஸொன்றும், ஆட்டோவொன்றும் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் ரிகில்கஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆட்டோவில் பயணித்தவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸ் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.

க.யோகா

Related Articles

Latest Articles