அனுஷ்கா ஷர்மா, விராட் கோஹ்லி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.தாயும் சேயும் நலமாக இருப்பதாக விராட் கோஹ்லி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நடிகையும் விராட் கோஹ்லியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, பிரசவத்திற்காக மும்பையின் ப்ரீச் கேண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அனுஷ்கா சர்மா இன்று பிற்பகல் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாயும் சேயும் நலமாக இருப்பதாக விராட் கோஹ்லி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
” உங்கள் அன்பு, பிரார்த்தனை மற்றும் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி. அனுஷ்கா மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்க நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை நீங்கள் மதிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.” என கூறி உள்ளார்.