‘வீட்டில் இருந்தே சுகாதார பாதுகாப்புடன் தீபாவளியைக் கொண்டாடுங்கள்’

” தீபாவளி பண்டிகையை வீட்டிலேயே சுகாதாரப் பாதுகாப்புடன் கொண்டாடுங்கள்.” – என்று இலங்கைவாழ் இந்து மக்களிடம் இலங்கை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் இன்று (12) விசேட அறிவிப்பொன்றை விடுத்த பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதிப்பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன கூறியவை வருமாறு,

” எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவுவரை மேல்மாகாணத்தில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சோதனை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, எவராவது வெளியேற முற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரிவினரால் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். எனவே, தனிமைப்படுத்தல் கால எல்லை முடிவடையும்வரை நடைமுறைகள் உரியவகையில் பின்பற்றப்படவேண்டும்.

அதேவேளை, மேல் மாகாணத்திலும் அதற்கு வெளியில் உள்ள தமிழ் மக்களிடமும், தீபாவளியை உங்கள் வீட்டுக்குள்ளேயே சுகாதார பாதுகாப்புடன் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். சமூகமாக இணைந்து கொண்டாடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.” – என்றார்.

Related Articles

Latest Articles