‘வீட்டுத்திட்டத்தை விமர்சிக்க இ.தொ.காவுக்கு உரிமை கிடையாது’ – ராதா

தமிழ் முற்போக்கு கூட்டணியின் சேவைகளை விமர்சிப்பதற்கு சில அரசியல் கட்சிகளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. குறுகிய காலப்பகுதிக்குள் பல திட்டங்களை செய்து முடித்துள்ளோம். ஆயிரம் ரூபாவை பெறுவதற்காக எமது அழுத்தங்களும் தொடரும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான முன்னாள் அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பூண்டுலோயா சீன் தோட்டத்தில் 23.07.2020 அன்று மாலை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மலையகத்துக்கான தனிவீட்டுத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்தவர்தான் திகாம்பரம். கடந்த காலங்களில் இருந்தவர்கள் உரியவகையில் செய்யவில்லை. ஆனால், குறுகிய காலப்பகுதிக்குள் திகாம்பரம் சுமார் 7 ஆயிரம் வீகளை நிர்மாணித்துக்கொடுத்துள்ளார்.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீடுகளில் மலையகத்துக்கு 4 ஆயிரத்து 50 வீடுகள் வழங்கப்பட்டன. 2010 இல் இதற்கான அனுமதி கிடைத்தும் 2015வரை கட்டப்படவில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணி வந்தபின்னரே குறித்த வீட்டுத்திட்டம் முடிக்கப்பட்டது. எனவே, எமது வீட்டுத்திட்டத்தை எவரும் விமர்சிக்கமுடியாது. உங்களுக்கு பணி செய்வதற்காகமே நாம் அரசியலில் இருக்கின்றோம்.

கடந்த பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் எமக்கு அமோக ஆதரவை தந்தீர்கள். நானும், திகாம்பரமும், திலகரும் பாராளுமன்றம் சென்றோம். மூவரும் சிறப்பாக செயற்பட்டுள்ளோம். திலவர் பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்படக்கூடியவர். எனவே, அவரை தேசியப்பட்டியலில் உள்ளே கொண்டுபோக வேண்டும். அது எமது கடமை. உதயாவும் சிறப்பாக செயற்படக்கூடியவர். அவர் எம்முடன் களமிறங்கியுள்ளார்.

மாகாண அமைச்சராக இருக்கும்போது கல்வித்துறைக்காக பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்தேன். கல்வி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னரும் எனது பணிகள் தொடர்ந்தன. கணித, விஞ்ஞான பாடசாலைகள் மலையக பகுதிகளில் திறக்கப்பட்டன. நுவரெலியா மாவட்டத்துக்கு மாத்திரம் அல்ல, எல்லா மாவட்டத்துக்கும் சேவை செய்துள்ளேன்.

முழு மலையகத்துக்கும் எமது சேவை தொடரவேண்டுமானால் பிரதிநிதிகளை தெரிவுசெய்யவேண்டிய பொறுப்பு நுவரெலியா மாவட்ட மக்களுக்கே இருக்கின்றது.  எனவே, எமக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள பிரச்சினையை ஜனாதிபதி மற்றும் பிரதமரால் தீர்த்துவைக்கமுடியாது. கம்பனிகள்தான் அதனை செய்யவேண்டும். ஆயிரம் ரூபாவுக்கும் மேல் தற்போது தேவை. எனவே, குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாவை வழங்குவதற்காவது கம்பனிகள் முன்வரவேண்டும். அதற்கான எமது அழுத்தங்கள் தொடரும்.

சஜித் பிரேமதாசதான் பிரதமராகவர வேண்டும். அதற்கு நாம் உறுதுணையாக இருப்போம்.”  -என்றார்.

க.கிசாந்தன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles