வெல்லவாய நகருக்கும் 3 நாட்களுக்கு பூட்டு!

மொனறாகல மாவட்ட வெல்லவாய நகரம் இன்றுமுதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு வெல்லவாய நகர வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்தசில நாட்களாக வெல்லவாய பிரதேசத்தில் 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு வர்த்தக சங்கத்தினர் தாமாகவே இவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை படல்கும்பர பிரதேச சபைக்குட்பட்ட அலுபொத்த கிராம பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 24 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக படல்கும்பர பிரதேச பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட அலுபொத்த பகுதியில் (15/12)நேற்றைய தினம் 159 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு படல்கும்பர நகர வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles