ராகம, எலப்பிட்டிவல சந்திக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருபர் பலியாகியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இன்று (21) காலை 7.15 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர், “வெல்லே சாரங்க” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உறவினரான ஹெட்டியாராச்சிகே டொன் சுஜித் என அடையாளம் காணப்படுள்ளார்.










