வெளிநாடுகளுக்கு பணிந்து மாகாண தேர்தலை நடத்தும் முடிவை எடுக்கவில்லை

இந்தியா அல்லது அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தற்பொழுது ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையில் கூட்டத்தொடர் நடைபெறுகின்றது. இந்த விடயத்திற்கும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் zoom தொழில்நுட்பத்தில் நடைபெற்றது. இதன் போது ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

முன்னைய அரசாங்கத்தினால் மாகாண சபை தேர்தல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட பிரேரணையின் போது அது காலவரையறை இன்றி ஒத்திபோடப்பட்டது.

இதனால் மாகாண சபை தேர்தல் நடைபெறுவதில் ஏற்பட்ட சட்ட ரீதியிலான தடைகளை நீக்குவதற்காக அரசாங்கம் தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மாகாண சபை எமது அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு மத்தியிலா? அரசாங்கம் மாகாண சபை தேர்தலை நடத்துகின்றது என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், அமைச்சர் முன்னைய அரசாங்க காலத்தில் மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இதுதொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது வாக்கெடுப்பு 5.00 மணிக்கு நடைபெறவிருந்தது. வாக்களிப்பில் கலந்துக்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வருகைக்காக தாமதப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஒத்திவைக்கப்பட்டது.

அரசியல் யாப்புக்குட்பட்ட முக்கிய விடயமாகும். இதற்கு உடன்படுவதா? இல்லையா? என்பதில்லை பிரச்சினை. கடந்த அரசாங்க காலத்தில் மாகாண சபை தேர்தலை எதிர்கொள்வதற்கு அவர்களுக்கு இருந்த அச்சமே காரணம் அதனாலேயே தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதனால் அதனை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பது முக்கியமாகும். அதற்கு தற்பொழுது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Articles

Latest Articles