மூன்றரை வயதுடைய பெண் குழந்தையொன்றின் மீது வேனொன்று மோதியதினால், அக்குழந்தை படுகாயமுற்ற நிலையில் பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் சிகிச்சை பயனளிக்காது மரணமானார்.
இச்சம்பவம் 02-04-2021 முற்பகல், பதுளை – முடகமூவை என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
பதுளைப் பகுதியின் முடகமூவ என்ற இடத்தைச் சேர்ந்த நெத்மி நிசன்சா என்ற மூன்றரை வயதுடைய பெண் குழந்தையே மரணமானவராவார்.
இக்குழந்தை வீட்டின் முன்னால் பாதையில் விளையாடிக் கொண்டிருந்த போதே, அப்பாதையில் பயணித்த வேன், குழந்தை மீது மோதியுள்ளது.
இது குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது, வேன் சாரதியின் கவனயீனத்தினால் இவ்விபத்து இடம்பெற்றதாகக் கூறிய பொலிசார், வேன் சாரதியைக் கைது செய்துள்ளனர்.
வேன் சாரதி விசாரணையின் பின்னர், பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று பொலிசார் தெரிவித்தனர்.
எம். செல்வராஜா, பதுளை










