வைத்தியர் அர்ச்சுனா மன்னார் பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் வைத்தியசாலை வைத்தியர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்தே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நேற்றிரவு நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக மன்னார் வைத்தியசாலை நிர்வாகம் , மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு முன்வைத்துள்ளது.
மன்னார் தம்பன்னை குளத்தை சேர்ந்த இளம் தாய் ஒருவர் அண்மையில் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் தகவல் சேகரிக்க வந்த நிலையில், வைத்திய செயற்பாட்டு வைத்தியர்கள் மற்றும் சுகாதர ஊழியர்களின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து வைத்தியர் அர்சுனா இன்றைய தினம் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
