ஹப்புத்தளையில் குளவிக்கொட்டு! 10 பெண் தொழிலாளர்கள் பாதிப்பு!!

ஹப்புதளையில், ஹப்புத்தளை பெருந்தோட்டப் பிரிவில் தேயிலைத் தளிர்களை கொய்து கொண்டிருந்த 10 பெண் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (19) பிற்பகல் இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்தனர்.

குளவிக் கொட்டுக்குஇலக்கான 10 பெண் தொழிலாளர்களும், ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையிலுள்ளனர். இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

தொழில் கடமைகளில் ஈடுபட்டிருந்தவேளையில்,மரமொன்றிலிருந்து குளவிக்கூடு கலைந்து, கடமைகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை கொற்றத் தொடங்கின. உடனடியாக அத் தொழிலாளர்கள்,தோட்ட நிருவாகத்தின் மூலம் வாகனமொன்றில் ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles