நாட்டில் 10 மாவட்டங்களில் இன்றும் உஷ்ணமான காலநிலை நிலவும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
முல்லைத்தீவு, வவுனியா, புத்தளம், குருணாகல், அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனறாகலை ஆகிய மாவட்டங்களிலேயே கடும் வெப்பம் நிலவக்கூடும்.
அதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் உஷ்ணமான காலநிலை ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
