மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குவது தொடர்பில் தமது முடிவை அறிவிப்பதற்காக பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு, தொழில் அமைச்சர் நிமல்சிறிபாலடி சில்வா இரு வாரங்கள் அவகாசம் வழங்கியுள்ளார்.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் , கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பிரமுகர்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று தொழில் அமைச்சர் நடைபெற்றது.
இதன்போதேபெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அமைச்சரினால் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வாரங்களில் பெருந்தோட்ட நிறுவனங்கள் தங்களது தீர்மானங்களை அறிவிக்காவிடத்து அரசாங்கம் தமது முடிவை அறிவிக்கும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டதாக இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.