10,500 கஞ்சா செடிகள் மீட்பு! ஒருவர் கைது!!

கஹட்டருப்ப பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலகஹகெதர காட்டு  பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு தேடுதல் வேட்டை நடத்தினர். 9 அடி உயரம் உள்ள 7, 500  கஞ்சா செடிகளும் , 4 கிலோ 468 கிராம் உலர்ந்த கஞ்சாவுடன் 20 வயதுடைய எம்பிலிப்பிட்டய பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவரும் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு அதே பகுதியில் 3000 கஞ்சா செடிகளும் 5 கிலோ 750 கிராம் உலர்ந்த கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளன. எனினும், எவரும் கைது செய்யப்படவில்லை.

சந்தேக நபரையும் கஞ்சாவும் கஹட்டருப்ப பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப் படையினர் ஒப்படைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேக நபரை இன்றைய தினம் பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கஹட்டருப்ப பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles