ஈரானில் 11 ஆயிரம் இலக்குகள் அழிப்பு!

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், புதிய தலைமை அமெரிக்காவுடன் இணக்கமான ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் வலியுறுத்தினார்.

சிலவேளை இணக்கம் ஏற்படவில்லை எனில், அமெரிக்க ராணுவம் தனது தாக்குதலின் தீவிரத்தை பலமடங்கு அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, கடந்த முப்பது நாட்களில் ஈரானில் 150-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் 11,000 இலக்குகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக ராணுவத் தளபதி டான் கெய்ன் தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்கா பெற்றுள்ள வான்வழி ஆதிக்கம், பி-52 ரக குண்டுவீச்சு விமானங்கள் தரைப்பகுதிகளுக்கு மேல் பறந்து தாக்குதல் நடத்த வழிவகுத்துள்ளது.

Related Articles

Latest Articles