1,200 ரூபாவுக்கே முதலாளிமார் சம்மேளனம் இணக்கம்!

ஜனாதிபதியும், தொழில் அமைச்சரும் விடுத்த கோரிக்கைக்கு அமைய, ஆயிரத்து 200 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக பெருந்தோட்ட நிறுவனங்களின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.

1200 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன் ஊழியர் சேமலாப நிதியம் , ஊழியர் நம்பிக்கை நிதியம் அடங்கலாக 1380 ரூபா தோட்டத் தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளப் பொதியாகக் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.

மேலதிகமாக பறிக்கப்படும் ஒரு கிலோ கொழுந்திற்கு 60 ரூபாவை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை எழுத்து மூலம் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் கையளித்ததாகவும் அவர் கூறினார்.

ஏற்கனவே, ஒரு கிலோ கொழுந்திற்கு 40 ரூபா வழங்கப்பட்டதாகவும் தற்போது மேலதிகமாக 20 ரூபாவை அதிகரித்து வழங்குவது 50 வீத அதிகரிப்பு எனவும் ரொஷான் ராஜதுரை சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 350 ரூபா வழங்கப்படும் எனவும், விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் என நாளொன்றுக்கான மொத்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles