மாயமான சிறுவன் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு, வற்றாப்பளைப் பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து உறவினர் வீட்டுக்குச் சென்ற மேற்படி சிறுவன் நேற்று காணாமல்போயிருந்த நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்தார் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், இன்று அந்தப் பகுதியிலுள்ள நீர் நிலை ஒன்றில் இருந்து மேற்படி சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுளார்.

சிறுவனின் மரணம் கொலையா? அல்லது விபத்தா? என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles