முதல்வர் பதவியை குறிவைக்கும் அர்ச்சுனா: சபைக்கு வருகிறார் தங்கம்!
மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
அவர் பதவி விலகிய பின்னர் விருப்பு வாக்கு பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ள சட்டத்தரணி கௌசல்யா நாடாளுமன்றம் வருவார்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பான அறிவித்தல் வெளியான பிறகு எம்.பி. பதவியை அர்ச்சுனா இராஜினாமா செய்யக்கூடும் என தெரியவருகின்றது.
எம்.பி. பதவியை இராஜினாமா செய்யும் காலப்பகுதி தொடர்பில் உரிய வகையில் தீர்மானம் எடுக்கப்படும் என அர்ச்சுனா குறிப்பிட்டார்.










