13 அமுலாக்கம் என்பது தேர்தல்கால வெற்றுக் காசோலை

“13” ஐ நடைமுறைப்படுத்துவது அல்லது ‘13 பிளஸ்’ வழங்குவது எனக் கூறுவதெல்லாம் தெற்கு வேட் பாளர்களின் தேர்தல் கால வெற்றுக் காசோலை என தேசிய மக்கள் சக் தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸநாயக்க யாழ்ப் பாணத்தில் வைத்துத் தெரிவித்தார்.

நேற்றையதினம் வியாழக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் ஜனாதிபதித் தேர்தல் பரப்புரை கூட்டம் இடம்பெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

“ தமிழ் மக்களிடம் 13ஐ வைத்து வியாபாரம் செய்வதற்கு நான் வரவில்லை. அந்த வியாபாரத்தை செய்யும் நோக்கமும் எனக்கு இல்லை. தென்னிலங்கை அரசியல்வாதி கள் ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலி லும் தமிழ் மக்களுக்கு 13 ஐக்காட்டி வாக்குகளைப் பெறும் முயற்சிகளைத் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றனர். நான் தமிழ் மக்களிடம் 13 ஐத் தருகி றேன் என வியாபாரத்தை கூற மாட்டேன்.

ஒட்டுமொத்த இலங்கை மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்குவதோடு புதிய அரசியலமைப்பை ஏற்படுத்து வேன். நாட்டில் நீண்ட காலமாக புரையோடி உள்ள லஞ்சம், ஊழல்வாதிகளை அப் புறப்படுத்தி, புதிய இலங்கையை உருவாக் குவதே எனது இலக்கு. அதற்காகவே மக்கள் எங்களோடு அணி திரண்டுள்ளனர். நாட்டு மக்கள் எம்முடன் திரண்டுள்ள நிலையில் சுமந்திரன் சஜித் பிரேம தாஸவுக்கு ஆதரவு வழங்கி தமிழ் மக்க ளின் எதிர்பார்ப்பை சீரழிக்கப் பார்க்கிறார்.

சஜித் பிரேமதாஸ 13 ஐத் தரப் போகி றாரா அல்லது 13 பிளஸ் தரப் போகிறாரா என்பது தொடர்பில் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும். நாங்கள் நாட்டை கொள்ளை அடிக்க வில்லை. நாட்டு மக்களைக் கடனாளியாக்கவில்லை.

நாட்டைக் கொள்ளையடித் தவர்களும் நாட்டைக் கடனாளியாக் கியவர்களும் தற்போது ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கிய சஜித் மற்றும் ரணில் பக்கமே உள்ளனர்.

இது ஏன் கூறுகிறேன் என்றால் ராஜபக் ஷக்கள் நாட்டைக் கொள்ளை அடித்து விட்டார்கள் எனக் கூறிய ரணில் தரப்பி னரில் சிலர் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸ பக்கம் உள்ளனர்.

அதேபோல மொட்டு கட்சியின் ஜனாதி பதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, ராஜ பக்ஷ குடும்பத்தின் ஊழல், மோசடி களை மூடி மறப்பதற்காக ஜனாதிபதி தேர்தலில் களம் இறக்கப்பட்டுள்ளார். இவருடன் ஊழல் மோசடிகளை தடுப் போம் என கூறி வந்த ஜனாதிபதி வேட்பா ளர் ரணில் விக்கிரமசிங்க பக்கத்தில் இருந்த சிலர் நாமல் ராஜபக்ஷவின் பக்கத்துக்கு சென்றுள்ளனர்.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் நாமல், சஜித், ரணில் அணிகள் நாட்டைத் திருடிய – நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற – நபர்களை உள்ளடக்கிய கூட்டமே. பகுதி பகுதியாக மூவர் பக்கமும் அவர்கள் பிரிந்து நிற்கின்றனர்.

இவர்களால் நாட்டை அழித்தவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. ஏனெனில் மூவரும் ஒருவரை ஒருவர் சளைத்த வர்கள் அல்லர் என்பதை நிரூபித்துள் ளார்கள். ஆகவே தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ள மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு மக்கள் தயாராக இருக்கின்ற நிலையில், வடக்கு மக்க ளும் இந்த மாற்றத்தில் பங்கெடுக்கத் தயாராக வேண்டும். – என அவர் மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles