அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
13 என்பது அரசியலமைப்பின் ஓர் அங்கமாகும். அதனை எதற்காக எதிர்க்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு சார்பான ஓரிரு பிக்குகளே 13 இற்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர் எனவும் கிரியல்ல சுட்டிக்காட்டினார்.










