உலகின் செல்வாக்குமிக்க தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
உலகின் 24 ஜனநாயக நாடுகளில் நடத்தப்பட்ட மக்கள் கருத்து கணிப்புகளின் அடிப்படையிலேயே இத்தெரிவு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற ஆய்வு நிறுவனம், பல்வேறு நாட்டுத் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து அண்மையில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.
இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
24 ஜனநாயக நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்று அதாவது 70 சதவீத மக்களின் ஆதரவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராகத் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் 63 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடத்தையும், செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரே பாபிஷ் 55 சதவீத ஆதரவுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜேர்மனி பிரதமர் பிரெடரிக் மெர்ஸின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று அந்த நாட்டு மக்களில் சுமார் 76 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் உலக அளவில் செல்வாக்கு குறைந்த தலைவர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார்.
