இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் இதுவரையில் 11 ஆயிரத்து 237 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 430தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் (866) கடந்த 23 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டனர். ஒரே நாளில் அதிகளவானவர்கள் (765) நேற்று (5) குணமடைந்தனர்.
மினுவாங்கொட கொத்தணிமூலம் ஆயிரத்து 41 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் ஆயிரத்து 7 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. ஏனைய 9 ஆயிரத்து 189 பேரும் இவர்களுடன் தொடர்பை பேணியவர்களாவர்.
நாட்டில் நேற்று மாத்திரம் 8 ஆயிரத்து 272 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 6 லட்சத்து 19 ஆயிரத்து 108 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் கொரோனா மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 715 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 9 ஆயிரத்து 537 பேர் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 137 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 41 பேர் உயிரிழந்துள்ளனர்.