15 அடி பள்ளத்தில் வீழ்ந்து பொலிஸ் வாகனம் விபத்து!

நுவரெலியா, டயகம பொலிஸ் நிலையத்துக்கு உரித்தான பொலிஸ் ஜீப் வாகனம், நேற்று மாலை விபத்துக்குள்ளானதில் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதோடு, பொலிஸ் சாரதி காயமடைந்துள்ளார்.

சுமார் 15 அடி‌ உயரத்திலிருந்து கீழே விழுந்து  இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. டயகம நகரத்திலிருந்து பொலிஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது குறித்த பொலிஸ் வாகனத்தில் சாரதியும் பொலிஸ் நிலைய அதிகாரியும் சென்றுள்ளனர். மேற்படி வாகனம் முழுமையாக சேதமடைந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை டயகம போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles