162 கட்சிகளின் விண்ணப்பங்களில் 24 மட்டுமே அங்கீகரிக்கப்படும் நிலை!

இலங்கையில் புதிதாகப் பதிவு செய்வதற்காக விண்ணப்பித்த 162 அரசியல் கட்சிகளில் இருந்து 24 கட்சிகளின் விண்ணப்பங்களை மட்டுமே தேர்தல் கள் ஆணைக் குழு அங்கீகரிக்கும் நிலைமை இருப்பதாகத் தெரிகின்றது.

இலங்கையில் தற்போது 70 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பதிவில் உள்ள நிலையில் புதிதாக பதிவு செய்வதற்காக 162 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் விண் ணப்பம் செய்திருந்தன.

இவ்வாறுவிண்ணப்பித்த 162 விண்ணப்பங்களில் படிவ பரிசோதனையின்போதே 40 அரசியல் கட்சிகளின் படிவங்கள் நிரா கரிக்கப்பட்டன.

122 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக் குழுவினால் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுநேர்முகத் தேர்விற்கும் அழைக்கப்பட்டன.

இவ்வாறு நேர்முகத் தேர்விற்கு உட்படுத் தப்பட்ட கட்சிகளில் இருந்தும் 27 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் தவிர்ந்து ஏனையவை நிராகரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிகின்றது.

27 அரசியல் கட்சிகளில் 20 கட்சிகள் இரண்டாம் நேர்முகத் தேர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று இரண் டாம் நேர்முகத் தேர்விற்கு மேலும் ஏழுஅரசியல் கட்சிகள் அழைக்கப்படவுள் ளன.

இவ்வாறு அழைக்கப்படவுள்ள 7 அரசி யல் கட்சிகளின் இரண்டாம் நேர்முகத் தேர்வுடன் கட்சிகள் மீதான ஆய்வு நிறைவுபெறும்.

இவ்வாறு இடம்பெற்ற ஆய்வுகள், நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் சுமார் 24 அரசியல் கட்சிகள் மட்டுமே பதிவுக்கு ஏற்றுக்கொள்ளும் நிலைமைகாணப்படுவதாக விடயமறிந்த வட்டா ரங்கள் தகவல் வெளியிட்டன.

Related Articles

Latest Articles