1989 முதல் 2015 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள்!

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பரப்புரைக் கூட்டங்களை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியிருந்தாலும் அந்த கட்டளையை கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் ஏற்று – செயற்படுவதை காணமுடியவில்லை.

கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிட்டது என முன்னதாக அறிவிப்புகள் விடுக்கப்பட்டிருந்தாலும், இரண்டாவது அலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதால், சுகாதார நடைமுறைகளுக்கு முன்னுரிமை – முக்கியத்துவம் வழங்கியே தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் தேர்தலுக்கான மொத்த செலவு ஆயிரம் கோடி ரூபாவைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 196 ஆசனங்களைக் கைப்பற்றுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து 3 ஆயிரத்து 682 பேரும், சுயேட்சைக்குழுக்களின் சார்பில் 3 ஆயிரத்து 800 பேருமாக மொத்தம் 7 ஆயிரத்து 452 பேர் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 874 பேர் தகதிப்பெற்றுள்ளனர். இதில் எத்தனைபேர் வாக்களிப்பார்கள் என்பதை சரியாக கணித்துகூறமுடியாது. அதேபோல் அளிக்கப்படும் வாக்குகளில் எத்தனை வாக்குகள் நிராகரிக்கப்படும் என்பதையும் ஊகிக்கமுடியாது.

ஆனால், கடந்த காலங்களில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் தொடர்பான விபரத்தை பார்ப்போம்.

இலங்கையர்களுக்கு 1931 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது. இதன்படி இலங்கையின் முதலாவது அரசுப்பேரவைக்கான பொதுத்தேர்தல் 1931 ஜுன் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை நடைபெற்றுள்ளது.

1947 ஆம் ஆண்டுக்கு முன்னர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு, அவர் அங்கம் வகிக்கும் கட்சிக்கான நிறத்தின் அடிப்படையிலேயே வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.1947 ஆம் ஆண்டுதான் அரசியல் கட்சிகளுக்கும், சுயேட்சைக்குழுக்களுக்கும் தேர்தல் சின்னங்கள் வழங்கப்பட்டு, தொகுதிவாரி முறையில் வாக்களிப்பு இடம்பெற்றது.

எனினும், 1978 இல் தொகுதிவாரிமுறைமாறியது. விகிதாசார – விருப்புவாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றளவிலும் அந்தமுறையிலேயே தேர்தல் நடைபெற்றுவருகின்றது.

1. தேர்தல் திகதி – 1989 பெப்ரவரி 15

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 59 லட்சத்து 62 ஆயிரத்து 31 ( 63.60%)

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3 லட்சத்து 65 ஆயிரத்து 563 ( 6.13%)

செல்லுபடியான வாக்குகள் – 55 லட்சத்து 96 ஆயிரத்து 468 ( 93.87%)

2.1994 ஒக்டோபர் 16

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 83 லட்சத்து 44 ஆயிரத்து 95 (76.24%)

நிராகரிக்கப்பட்ட வாக்ககள் – 4 லட்சத்து 389 ( 4.80% )

செல்லுபடியான வாக்குகள் 79 லட்சத்து 43 ஆயிரத்து 706 (95.20%)

3.2000 ஒக்டோபர் 10

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 91 லட்சத்து 28 ஆயிரத்து 823 (75.62%)

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 481,155 (5.27 %)

செல்லுபடியான வாக்குகள் 86 லட்சத்து 47 ஆயிரத்து 668 ( 94.72% )

5.2001 டிசம்பர் 05

அளிக்கப்பட்ட வாக்குகள் – 94 லட்சத்து 49 ஆயிரத்து 813 ( 76.03% )

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4 லட்சத்து 93 ஆயிரத்து 944 ( 5.22%)

செல்லுப்படியான வாக்குகள் – 89லட்சத்து 55 ஆயிரத்து 869 ( 94.77% )

5. 2004 ஏப்ரல் 02  

அளிக்கப்பட்ட வாக்குகள் – 97 லட்சத்து 97 ஆயிரத்து 680

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5 லட்சத்து 34 ஆயிரத்து 948 

செல்லுப்படியான வாக்குகள் – 92 லட்சத்து 62 ஆயிரத்து 732

6.2010 ஏப்ரல் 08 

அளிக்கப்பட்ட வாக்குகள் 86 லட்சத்து 30 ஆயிரத்து 689 ( 61.26% )

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5லட்சத்து 96 ஆயிரத்து 972 ( 6.92% )

செல்லுபடியான வாக்குகள் – 80 லட்சத்து 33 ஆயிரத்து 717 ( 93.08%)

7.2015 ஒக்டோபர் 17 

அளிக்கப்பட்ட வாக்குகள் ஒரு கோடியே 16 லட்சத்து 84 ஆயிரத்து 98 ( 77.66%)

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5லட்சத்து 17 ஆயிரத்து 123  ( 4.43% )

செல்லுபடியான வாக்குகள் – ஒரு கோடியே 11 லட்சத்து 66 ஆயிரத்து 975 ( 95.57%)

வாக்கு என்பது உங்கள் பலம் – உரிமை. எனவே, அதனை முறையாக அளிக்கவேண்டியதும் உங்கள் பொறுப்பாகும்.

பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக, வாக்களிப்பு நிலையத்துக்கு சென்ற பின்னர், உங்களுக்கு வழங்கப்படும் வாக்குச்சீட்டில் முதலில் தேர்தலில் போட்டியிடும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவின் சின்னத்துக்கு முன்னால் புள்ளடி (X) இடவேண்டும்.

அதன்பின்னர் அக்கட்சியில் போட்டியிடும் மூவருக்கு விருப்பு வாக்குகளை வழங்கலாம். வேட்பாளர்களின் இலக்கங்களுக்கு மேல் புள்ளடி இடவேண்டும்.

மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கை பயன்படுத்தமுடியாது. நீங்கள் விரும்பும்பட்சத்தில் ஒருவருக்கு மாத்திரம் விருப்பு வாக்கை வழங்கலாம். ( அவ்வாறு வழங்கினால் மூன்று வாக்குகளும் அவருக்கு சென்றடையும் என அர்த்தப்படாது)

கட்சி அல்லது சுயேட்சைக்குழுவுக்கு முன்னால் புள்ளடி இடாமல் விருப்பு வாக்கு பயன்படுத்தப்படுமானால் அந்த வாக்கு நிராகரிக்கப்பட்ட வாக்காகவே கருதப்படும். மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கை பயன்படுத்துவதும் பிழையான நடைமுறையாகும். புள்ளடி இடுவதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை அடையாளம் இடவும். அவ்வாறு இல்லாவிட்டால் அந்த வாக்கும் ஏற்றுக்கொள்ளப்படாது.

வாக்களிப்பு நிலையத்துக்கு செல்வதற்கு முன்னர் வாக்காளருக்கான அட்டை, அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் ( தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு….) இருக்கின்றனவா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இம்முறை கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே தேர்தல் நடைபெறுகின்றது. எனவே, முகக்கவசம் அணிந்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுங்கள். வாக்களிப்புக்காக ஒரு மணிநேரம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதால் இறுதிநேரம்வரை காத்திருக்காது முடிந்தளவு விரைந்துசென்று வாக்குரிமையை பயன்படுத்தவும்.

(வழமையாக காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையே வாக்களிப்பு இடம்பெறும். இம்முறை மாலை 5 மணிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.)

எழுத்து – ஊடகவியலாளர் ஆர்.சனத்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles