2ஆம் அலைமூலம் 14,154 பேருக்கு கொரோனா! 48 மரணங்கள்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் இதுவரையில் 14 ஆயிரத்து 154 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 382 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் (866) கடந்த 23 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டனர். ஒரே நாளில் அதிகளவானவர்கள் (765) கடந்த 5 ஆம் திகதி குணமடைந்தனர்.

மினுவாங்கொட கொத்தணிமூலம் 3 ஆயிரத்து 106 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 11 ஆயிரத்து 48 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரை 8 ஆயிரத்து 381 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் நேற்று மாத்திரம்10 ஆயிரத்து 713பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 6 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் கொரோனா மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 11 ஆயிரத்து 806 பேர் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 810 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles