கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 43 ஆயிரத்து 525 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது என கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
நாட்டில் 25 மாவட்டங்களிலும் 2ஆவது அலைமூலம் வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் 37 ஆயிரத்து 559 பேர் இன்று காலைவரை குணமடைந்துள்ளனர்.
அத்துடன், இலங்கையில் 2020 மார்ச் முதல் நேற்றுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 47 ஆயிரத்து 304 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 40 ஆயிரத்து 316 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 763 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
