2ஆவது அலை ஊழித்தாண்டவம்! 27 நாட்களில் 60 பேர் பலி!!

இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (19) 15 ஆயிரத்து 330 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 60 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)

மினுவாங்கொட கொத்தணிமூலம்  ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு  வைரஸ் தொற்றியுள்ளது.

இவ்வாறு 2ஆவது அலைமூலம் கொரோனா தொற்றியவர்களில் நேற்றுவரை 9 ஆயிரத்து 200 இற்கும் மேற்பட்டோர்குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 18 ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 12 ஆயிரத்து 903 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 4 பேர் நேற்று உயிரிழந்தனர்.

கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்த இரு பெண்களும், இரு ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles