கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மேல் மாகாணத்தில் 33 ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 532 தொற்றாளர்களில் 307 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று வரை கொழும்பு மாவட்டத்தில் 19 ஆயிரத்து 422 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 687 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 9 ஆயிரத்து 977 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அத்துடன் மேல் மாகாணத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.