2ஆவது அலைமூலம் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரேனா! 21 பேர் பலி!!

நாட்டில் மேலும் 283 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 702 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 21 பேர் கடந்த 20 நாட்களுக்குள் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles