2ஆவது அலைமூலம் 11,857 பேருக்கு கொரோனா! 2 நாட்களில் 10 மரணங்கள்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் இதுவரையில் 11 ஆயிரத்து 857 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 635 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் (866) கடந்த 23 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டனர். ஒரே நாளில் அதிகளவானவர்கள் (765) கடந்த 5 ஆம் திகதி குணமடைந்தனர்.

நாட்டில் நேற்று மாத்திரம் 10 ஆயிரத்து 27 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 6 லட்சத்து 29 ஆயிரத்து 315 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் கொரோனா மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 10 ஆயிரத்து 183 பேர் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 121 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 46 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 நாட்களில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles