2ஆவது அலை – தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 178 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 662 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 116 பேர் உயிரிழந்துள்ளனர். 17 ஆயிரத்து 560 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 20  ஆயிரத்து 124 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles